பள்ளி மாணவியை நீதிபதி ஆக்கிய நீதிபதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 20, 2019

பள்ளி மாணவியை நீதிபதி ஆக்கிய நீதிபதி



வேலூர் மாவட்டம் சோளிங்கரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.


திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றியம் வீரமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கும், மாணவர் காவல் படையினருக்கும் (NCC) இன்று காவல்துறை, நீதித்துறை, மருத்துவத்துறை என பல்துறை சார்பில் சட்ட விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.



இதில் ஆர்.கே பேட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயராமன் காவல் சட்ட தடுப்புகளை பற்றி விளக்கினார்.அடுத்து சோளிங்கரில் உள்ள குற்றவியல் நீதித் துறையின் சார்பில் மாவட்ட உரிமையியல் நீதிபதி என்.சுரேஷ், கருவரை முதல் இறுதிவரை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது என்றும் பெண் சிசு கொலையை தடுப்பதும் சட்டம் தான் என்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.




இதையடுத்து அங்கிருந்த ஒரு மாணவியை அழைத்து தன் நீதிபதி இருக்கையில் அமரவைத்து இரண்டு நிமிடம் நீதான் இங்கு நீதிபதி என்று கூறினார். அந்த மாணவியை நீதிபதியாக நினைத்து அனைவரும் மரியாதை செய்தனர். இந்நிகழ்வு நீதிமன்றத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment