பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்" கதறி அழுத மாணவர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 5, 2019

பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்" கதறி அழுத மாணவர்கள்

கேரள இடுக்கி பள்ளி ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்த மாணவர்கள் கதறி அழுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.


கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள பள்ளியில் மாணவர்களை அடித்ததாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை பள்ளியை விட்டு வெளியேறியபோது மாணவ மாணவிகள் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் தொடுப்புழா_வில் செயல்பட்டு வரும் பள்ளியில் அமிர்தா என்பவர் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார்.


இவர் சக ஆசிரியர்கள் கால அட்டவணைப்படி வகுப்பறைக்கு செல்வதில்லை என தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறதுஇதனால் ஆத்திரமடைந்த சக ஆசிரியர்கள் அமிர்தா மாணவர்களை அடித்து துன்புறுத்துவதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளனர்.


புகார் குறித்து ஆசிரியரிடம் விசாரிக்காமல் மாவட்ட கல்வித்துறை ஆசிரியையை பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணியிலிருந்து நீக்கப்பட்ட ஆசிரியை பள்ளியை விட்டு வெளியேறியபோது மாணவ மாணவிகள் கதறி அழுதனர். இது அங்கு கூடி இருந்தவரை கண்கலங்கச் செய்தது

No comments:

Post a Comment