ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 பதவிக்கான, 2,144 காலியிடங்களை நிரப்ப, செப்., 27 முதல், 29 வரை போட்டி தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 1:2 என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்க்க முடிவானது. இதற்காக, அக்., 29 முதல், நவ.,1 வரை, தேர்வர்களால் அசல் சான்றிதழ்கள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன
.இதில், ஜாதி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரங்கள், தொழில்நுட்ப காரணங்களால் பதிவாகவில்லை. எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள், தங்களின் ஜாதிசான்றிதழை, இன்று மாலை, 6:00 மணிக்குள், மீண்டும் ஒரு முறை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இது குறித்து, தேர்வர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., - மின்னஞ்சலும் அனுப்பப் பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 1:2 என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்க்க முடிவானது. இதற்காக, அக்., 29 முதல், நவ.,1 வரை, தேர்வர்களால் அசல் சான்றிதழ்கள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன
.இதில், ஜாதி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரங்கள், தொழில்நுட்ப காரணங்களால் பதிவாகவில்லை. எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள், தங்களின் ஜாதிசான்றிதழை, இன்று மாலை, 6:00 மணிக்குள், மீண்டும் ஒரு முறை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இது குறித்து, தேர்வர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., - மின்னஞ்சலும் அனுப்பப் பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment