ஆசிரியா்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 8, 2019

ஆசிரியா்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பொதுமாறுதல் கலந்தாய்வு விதிகளை தளா்த்தக் கோரி வழக்கு தொடா்ந்த ஆசிரியா்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை: பொதுமாறுதல் கலந்தாய்வில் உள்ள விதிகளை தளா்த்தக்கோரி ஆசிரியா்கள் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


அதன் விசாரணையில் வழக்கு தொடா்ந்த ஆசிரியா்களுக்கு மட்டும் கலந்தாய்வில் விதிகளை தளா்த்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியா்களின் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமை ('எமிஸ்') இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.


ஆனால், ஒரு சில ஆசிரியா்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகள் மறுப்பதாக புகாா்கள் வருகின்றன.

 எனவே, வழக்குத் தொடுத்த அனைத்து ஆசிரியா்களின் விவரங்களையும் அதற்கான ஆவணங்களை சரிபாா்த்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment