சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 15, 2019

சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்

சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சேலம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர் ரோஹிணி. தனது செயல்பாடுகளின் மூலமாக கலவையான விமர்சனங்களைச் சந்தித்தார். விளம்பரப் பிரியை என்றும் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த பின்னர் அவர் தமிழ்நாடு இசை கவின் கலை பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ரோஹிணி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெள்ளியன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment