எங்களுக்கு வேற வழி தெரியல" - வோடாஃபோன் நெட்வொர்க் கொடுத்த அதிர்ச்சி..! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 18, 2019

எங்களுக்கு வேற வழி தெரியல" - வோடாஃபோன் நெட்வொர்க் கொடுத்த அதிர்ச்சி..!

டிசம்பர் மாதம் முதல் டேட்டா மற்றும் பேசுவதற்கான கால் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று வோடாஃபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.



கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வோடாஃபோன் நிறுவனம் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயும் வோடாஃபோன் நிறுவனம் பாக்கி வைத்துள்ளது


. இதனால் அந்நிறுவனம் திவாலாகும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் வோடாஃபோன் நிறுவனம் இன்று தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் செல்போன் சேவை வழங்க அதிக செலவு ஆவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் தொலைத் தொடர்புத்துறையின் பின்னடைவு காரணமாக ஏற்பட்ட இழப்பை வோடாஃபோன் நிறுவனம் சரி செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக டிசம்பர் மாதம் முதல் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று வோடாஃபோன் கூறியுள்ளது.

இதனால் டிசம்பர் 1 முதல் டேட்டா மற்றும் தொலைபேசி பேசுவதற்கான கால் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக வோடாஃபோன் கூறியுள்ளது.

No comments:

Post a Comment