பள்ளி பாடப்புத்தகங்கள் தேவைப்படும் மாணவர்கள் இ - சேவை மையத்தில் பணம் செலுத்தினால் வீட்டுக்கே புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைப்பதில் உள்ள சிரமத்தை போக்கதமிழ்நாடு பாடநுால் நிறுவனம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப்புத்தகங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
அரசு பொது இ-சேவை மையங்களில் பணம் செலுத்தி புத்தகங்கள் ஆர்டர் கொடுக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இ-சேவை மையங்களுக்கு பாடநுால் நிறுவனம் சார்பில் பயன்பாட்டாளர் பெயர், கடவுச்சொல் (பாஸ்வேர்டு) வழங்கப்பட்டு வருகிறது.
புத்தகங்கள் தேவைப்படும் மாணவர்கள் மட்டுமின்றி பள்ளிகளும் ஆன்லைனில் பணம் செலுத்தி ஆர்டர் கொடுக்கலாம். ஆர்டர் கொடுத்ததும் பதிவு எண் வழங்கப்படும். மூன்று நாட்களுக்குள் புத்தகங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைப்பதில் உள்ள சிரமத்தை போக்கதமிழ்நாடு பாடநுால் நிறுவனம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப்புத்தகங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
அரசு பொது இ-சேவை மையங்களில் பணம் செலுத்தி புத்தகங்கள் ஆர்டர் கொடுக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இ-சேவை மையங்களுக்கு பாடநுால் நிறுவனம் சார்பில் பயன்பாட்டாளர் பெயர், கடவுச்சொல் (பாஸ்வேர்டு) வழங்கப்பட்டு வருகிறது.
புத்தகங்கள் தேவைப்படும் மாணவர்கள் மட்டுமின்றி பள்ளிகளும் ஆன்லைனில் பணம் செலுத்தி ஆர்டர் கொடுக்கலாம். ஆர்டர் கொடுத்ததும் பதிவு எண் வழங்கப்படும். மூன்று நாட்களுக்குள் புத்தகங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment