ஜியோவை மிஞ்சிய அதிரடி ஆஃபரை அறிவித்த பி.எஸ்.என்.எல்.. - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, November 21, 2019

ஜியோவை மிஞ்சிய அதிரடி ஆஃபரை அறிவித்த பி.எஸ்.என்.எல்..



இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, ஜியோ உள்ளிட்டவை நஷ்டக்கணக்கு காட்டி வரும் நிலையில் வருங்காலத்தில் கட்டணங்களை உயர்த்தபோவதாக அறிக்கைகள் கடந்த வாரத்தில் வெளிவந்தது.




இந்நிலையில் இந்திய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என். எல், ஒரு அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது.

 அதில், ரூ.1699க்கு 365 நாட்களுக்கு தினசரி 250 நிமிடம் கால்கள் இலவசம், தினசரி 2 ஜிபி இணையவசதி மற்றும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம் என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், நவம்பர் மாதத்திற்குள் பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு சேவை பயன்படுத்தி இந்த ஆஃபரை அனுகுவர்களுக்கு 365+60 நாட்கள் இலவசம் என்று தெரிவித்துள்ளது.


அண்மையில்தான் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி இணையசேவைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த அறிவிப்பு ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.

No comments:

Post a Comment