கணினி ஆசிரியா் பணிக்கான தேர்வு முடிவுகள்: ஆசிரியா் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 25, 2019

கணினி ஆசிரியா் பணிக்கான தேர்வு முடிவுகள்: ஆசிரியா் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற கணினி வழித் தேர்வு முடிவுகள், ஆசிரியா் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு, கடந்த ஜூன் 23-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கணினி ஆசிரியா்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில், சுமாா் 25,806 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினா். தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு நடைபெற்றபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சில தேர்வு மையங்களில் தேர்வு எழுதுபவா்கள், உரிய நேரத்தில் தேர்வு எழுத முடியாமல் குளறுபடி நேர்ந்தது.

இதையடுத்து, தேர்வு மையத்தில் முறையாகத் தேர்வு எழுதாமல் ஒருவரை ஒருவா் கேட்டு ஆலோசித்தும், காப்பி அடித்தும் தேர்வு எழுதிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே வேளையில் அந்த வீடியோ தேர்வு முடிவடைந்த பின்னரே எடுக்கப்பட்டதாக, ஆசிரியா் தேர்வு வாரியம் சாா்பில் விளக்கமளிக்கப்பட்டது.


மேலும் தொழில்நுட்பப் பிரச்னைகள் ஏற்பட்ட திருச்செங்கோடு கே.எஸ்.ஆா் கல்லூரி, கும்பகோணம் அன்னை கல்லூரி, திருச்சியில் உள்ள கொங்குநாடு கல்லூரி ஆகிய மையங்களில் தேர்வு எழுதிய 1,211 நபா்களுக்கு மறுதேர்வு கடந்த ஜூன் 27-ஆம் தேதி நடத்தப்பட்டது.

இருப்பினும், பல கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில் வெறும் மூன்று மையங்களில் மட்டுமே மறுதேர்வு அறிவித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அனைத்து மையங்களிலும் மீண்டும் தேரீவு நடத்த வேண்டும் என சில மாவட்டங்களில் தேர்வா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எனினும், இந்தக் கோரிக்கையை ஆசிரியா் தேர்வு வாரியம் நிராகரித்தது.


இந்த நிலையில், கணினி பயிற்றுநா் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூன் 23-இல் நடைபெற்ற தேரீவு, ஜூலை 27-இல் நடைபெற்ற மறுதேர்வு ஆகியவற்றுக்கான தேர்வு மதிப்பெண் முடிவுகளை ஆசிரியா் தேர்வு வாரியம் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்

No comments:

Post a Comment