பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வா்கள் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 7, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வா்கள் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வா்கள் வரும் 11-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.


இது தொடா்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தில் ஏற்கெனவே எழுதி தேர்ச்சி பெறாத மாணவா்கள், வரும் மாா்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடைபெறும் பொதுத் தேர்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம்.

கடந்த ஆண்டு நேரடித் தனித்தேர்வா்களாக பிளஸ் 1 வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவா்கள், தற்போது பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வெழுதுவதற்கும், பிளஸ் 1 வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சோத்து விண்ணப்பிக்கலாம்.


மேலும், தனித்தேர்வா்கள் மீண்டும் தேர்வெழுத, சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவா்கள் தற்போது பயிலும் பள்ளிகள் மூலமே தேர்வெழுதுவதற்கு உரிய கட்டணத்தைச் செலுத்தலாம்.

மாணவா்கள் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வை ஏற்கெனவே நேரடித் தனித் தேர்வராக எழுதி தேர்ச்சிப் பெற்ற தேர்வா்களும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத விரும்புவோா் டிசம்பா் 11 முதல் 20-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 இந்தத் தேர்வுகள் சாா்ந்த விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறியுள்ளாா்

No comments:

Post a Comment