டிசம்பர் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 3, 2019

டிசம்பர் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை

கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டிசம்பர் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.


இவ்விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுவார்கள். எனவே, கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு டிசம்பர் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.


மேலும், அன்றைய விடுமுறைக்கு ஈடாக, டிசம்பர் 21ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment