குரூப்-1 தேர்வுக்கான நேர்காணலில் மோசடி நடக்க உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 11, 2019

குரூப்-1 தேர்வுக்கான நேர்காணலில் மோசடி நடக்க உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

குரூப்-1 தேர்வுக்கான நேர்காணலில் மோசடி நடக்க உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசு பணியாளர் தேர்வில் நடைபெறவுள்ள மோசடியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 1 பணிகளுக்கான முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுடைய பட்டியல் வெளியாகி இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.


இதனை தொடர்ந்து, துணை ஆட்சியர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் பொறுப்புக்காக நடக்கும் இந்த தேர்வுக்கான நேர்காணல் வரும் 23ம் தேதி நடைபெறுவதையும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.



அதில் கலந்து கொள்பவர்களுடைய மதிப்பெண்களை பேனாவால் எழுத கூடாது என்றும், கண்டிப்பாக பென்சிலால் மட்டுமே எழுத வேண்டும் என்றும் தேர்வு ஆணைய உறுப்பினர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி இருப்பதாக வைகோ கூறியுள்ளார்.


இதையடுத்து, மதிப்பெண்களை திருத்தி தங்களுக்கு வேண்டியவர்களை தேர்வு செய்வதற்காக இத்தகைய ஏற்பாடு நடைபெற்று வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த 21ம் நூற்றாண்டில் கணினிகளின் காலத்தில் வெளிப்படையாக ஒரு மோசடி நடைபெறவுள்ளதாக வைகோ விமர்சித்துள்ளார்.



கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த எந்த பின்புலமும் இல்லாத, தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்ற இந்த கொடுமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து, மதிப்பு எண்ணை கணினியில் பதிவு செய்யவும், நேர்காணலை காணொலியில் பதிவு செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்

No comments:

Post a Comment