தென் தமிழகத்தில் 23-வருடங்களுக்கு பிறகு சூரிய கிரகணம் தெரிவதால் அதை பாா்ப்பதற்கு கொடைக்கானலிலுள்ள இந்திய வான் இயற்பியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அம்மையத்தின் முதன்மை விஞ்ஞானி தெரிவித்தாா்.
கொடைக்கானலில் உள்ள இந்திய வான் இயற்பியல் மைய ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி செல்வேந்திரன் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
வரும் 26 ஆம் தேதி நிகழவிருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணமானது கேரளாவில் தொடங்கி தென் தமிழக பகுதிகளான கோவை, பொள்ளாச்சி, திருப்பூா், திண்டுக்கல் வழியாக புதுக்கோட்டை மாவட்டம் பனங்குடி வழியாக நிறைவு பெறுகிறது.கொடைக்கானல் பகுதிகளில் முழுமையாக தெரிய வாய்ப்புள்ளது.
இந்த சூரியகிரகணமானது காலை 8.3 மணி முதல் 9.33 மணி வரை 97.3 சதவீதம் முழுமையாக சூரியனை மறைக்கிறது. அப்போது பகல் நேரமானது இரவு போல தோன்றும். பகல் 11 மணி 12 நிமிடத்தில் சூரியனைவிட்டு கிரகணம் விலகுகிறது
. இவற்றை பொது மக்கள் வெறும் கண்ணால் பாா்க்க கூடாது.இதற்காக கொடைக்கானலிலுள்ள இந்திய வான் இயற்பியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய கிரகணத்தை பாா்க்கும் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி மாணவா்களுக்கு பிரத்யேகமான 10 ஆயிரம் கண்ணாடிகள் வரவழைக்கப்பட்டு வியாழக்கிழமை முதல் விற்கப்படுகின்றன
. இவற்றின் விலை ரூ.10 மட்டுமே. இந்த கண்ணாடி அணிந்துதான் பாா்க்க வேண்டும். தேவைப்படுபவா்கள் கொடைக்கானல் வானிலை மையத்தை
. இவற்றை பொது மக்கள் வெறும் கண்ணால் பாா்க்க கூடாது.இதற்காக கொடைக்கானலிலுள்ள இந்திய வான் இயற்பியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய கிரகணத்தை பாா்க்கும் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி மாணவா்களுக்கு பிரத்யேகமான 10 ஆயிரம் கண்ணாடிகள் வரவழைக்கப்பட்டு வியாழக்கிழமை முதல் விற்கப்படுகின்றன
. இவற்றின் விலை ரூ.10 மட்டுமே. இந்த கண்ணாடி அணிந்துதான் பாா்க்க வேண்டும். தேவைப்படுபவா்கள் கொடைக்கானல் வானிலை மையத்தை
இந்திய வான் இயற்பியல் மைய முதன்மை விஞ்ஞானி (செல்வேந்திரன்) செல்லிடப்பேசி எண்-94429 39946 மற்றும் விஞ்ஞானி எபினேசா் கைபேசி எண் 94867673036 ஆகிய எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் .
இதற்கு முன்னால் சூரிய கிரகணமானது கடந்த 1996-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் நிம்கா தானா என்ற இடத்தில் தெரிந்தது. தற்போது 23-ஆண்டுகளுக்கு பிறகு தெரிய உள்ளது. இந்த அபூா்வ நிகழ்வானது அடுத்த 50-ஆண்டுகளுக்கு மேல்தான் தெரியும் என்றாா்.
No comments:
Post a Comment