கூடுதல் இயக்குனர்களாக 3 பேருக்கு பதவி உயர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, December 2, 2019

கூடுதல் இயக்குனர்களாக 3 பேருக்கு பதவி உயர்வு




 செய்தித்துறையில் மூன்று இணை இயக்குனர்கள், கூடுதல் இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தமிழக கவர்னர் மாளிகையில், இணை இயக்குனர் நிலையில், மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வரும் சரவணன், கூடுதல் இயக்குனர் பதவி உயர்வுடன், அதே பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்

டில்லியில் உள்ள, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை இயக்குனராக பணியாற்றி வரும் முத்தையா, கூடுதல் இயக்குனர் பதவி உயர்வுடன், அதே பதவியில் நியமிக்கப் பட்டுள்ளார் 




தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழக இணை இயக்குனராக இருந்த அம்பலவாணன், கூடுதல் இயக்குனர் பதவி உயர்வுடன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலையில் நியமிக்கப் பட்டுள்ளார்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலையில், கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்த சாந்தி, தலைமை செயலகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

No comments:

Post a Comment