தேர்தல் பணியில் இவர்களுக்குக்கு விலக்கு அளிக்க வேண்டும்: ஆசிரியர் சங்கத்தினர் வேண்டுகோள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 10, 2019

தேர்தல் பணியில் இவர்களுக்குக்கு விலக்கு அளிக்க வேண்டும்: ஆசிரியர் சங்கத்தினர் வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து கர்ப்பிணி உடல்நிலை பாதித்த ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்'' என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் டி.ஜோசப்ரோஸ் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவு அலுவலர் உதவி அலுவலர் பணிக்கு ஆசிரியர்களே நியமிக்கப்படுவர். அதில் 80 சதவீதம் பேர் பெண்கள்.மாநில தேர்தல் ஆணையம் அளித்த உறுதிபடி ஆசிரியர்களில் கர்ப்பிணி பால் ஊட்டும் தாய் அறுவை சிகிச்சை செய்தோர் மருத்துவ விடுப்பில் உள்ளோருக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்களிக்க வேண்டும். 



நுாறு சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய தபால் ஓட்டை உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும்.தேர்தலில் எவ்வித முறைகேட்டுக்கும் இடமளிக்காத வகையில் நடத்த ஆசிரியர்கள் தயாராக உள்ளோம்.மாவட்ட கலெக்டர்கள் மூலம் மாநிலதேர்தல் ஆணையத்திற்கு மனு செய்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment