பென்சிலால் குறிக்கும் வழக்கம் இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 11, 2019

பென்சிலால் குறிக்கும் வழக்கம் இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பு:


 தொகுதி 1 க்கான நேர்முகத்தேர்வில் வெளிப்படையாக மோசடி நடைபெற இருப்பதாக ஒரு அரசியல் தலைவர்  அறிக்கை வெளியிட்டிருக்கிறார் இதை தேர்வாணையம் திட்டவட்டமாக மறுக்கிறது.


 எந்த நேர்முகத் தேர்விலும் பென்சிலால்  குறிக்கும் வழக்கம் தேர்வாணைய நடைமுறையில் எப்போதும் இல்லை.



நேர்முகத் தேர்வில் தேர்வருக்கு வழங்கப்படும் மதிப்பெண் வல்லுநர் குழுவினால் கலந்தாலோசிக்கப்பட்டு ஒருமித்த முடிவாக மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு தேர்வர்களுக்கு வழங்கப்படும்


 மதிப்பெண், கணினி வழியே மதிப்பீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட குறியீட்டுத்தாளில் பேனா மையினால் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. எனவே தேர்வர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை’ எனக்கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment