இந்த இடத்திற்கு நீங்கள் துணிப்பை மற்றும் சணல் பை கொண்டு வந்தால் உங்களுக்கு தங்கம் பரிசாக கிடைக்கும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, December 6, 2019

இந்த இடத்திற்கு நீங்கள் துணிப்பை மற்றும் சணல் பை கொண்டு வந்தால் உங்களுக்கு தங்கம் பரிசாக கிடைக்கும்

திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு துணிப்பை மற்றும் சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா கடந்த டிசம்பர் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவர் சுவாமிகள் வீதியுலாவும், இரவில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், டிசம்பர் 10-ம் தேதி மகா தீபமும், 11-ம் தேதி கார்த்திகை பௌர்ணமியையொட்டி கிரிவலமும் நடைபெறுகிறது.கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் திருவண்ணாமலை நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



இந்நிலையில் திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு துணிப்பை மற்றும் சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக வெள்ளியன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத வகையில் துணிப்பை மற்றும் சணல் பை கொண்டு வ்ருவதை நாங்கள் வரவேற்கிறோம். அதனை ஊக்குவிக்கும் வகையில் துணிப்பை மற்றும் சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்.



பின்னர் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்படும் 12 பக்தர்களுக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்றும்,
அதேபோல 72 பக்தர்களுக்கு பத்து கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment