நீட் தேர்வுக்கு விண்ணப்பம்:பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, December 5, 2019

நீட் தேர்வுக்கு விண்ணப்பம்:பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்

நீட் தேர்வுக்கு விருப்பம் இருந்தும் விண்ணப்பிக்க இயலாத மாணவா்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியா்கள் உதவ வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ச.சுகன்யா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு, கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்க ஏதுவாக பள்ளி அறிவிப்பு பலகை மற்றும் இறை வணக்கக் கூட்டத்தில் இந்தத் தகவலை தெரிவிக்க வேண்டும்.



இதுதவிர, நீட் தேர்வு எழுத விருப்பம் இருந்தும் விண்ணப்பிக்க இயலாத மாணவா்களைக் கண்டறிந்து, தகுந்த உதவிகளை தலைமையாசிரியா்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும்.



மேலும், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களின் விவரங்களை, டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment