அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கணினி பயிற்றுநர் நிலை 1-க்கான (முதுநிலை ஆசிரியர்நிலை)கணினி வழியிலான தேர்வு கடந்த ஜூன் 23, ஜூன் 27 ஆகிய நாள்களில் நடைபெற்றது.
இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் முடிவுகள் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரி பார்ப்புக்கு அழைக்கப்படும் பணிநாடுநர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னையில் கடந்த 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.
அதன் அடிப்படையில் தற்போது தற்காலிக தெரிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கணினி பயிற்றுநர் நிலை 1-க்கான (முதுநிலை ஆசிரியர்நிலை)கணினி வழியிலான தேர்வு கடந்த ஜூன் 23, ஜூன் 27 ஆகிய நாள்களில் நடைபெற்றது.
இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் முடிவுகள் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரி பார்ப்புக்கு அழைக்கப்படும் பணிநாடுநர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னையில் கடந்த 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.
அதன் அடிப்படையில் தற்போது தற்காலிக தெரிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment