அடுத்த கல்வியாண்டில் காலியாகும் முதுகலை ஆசிரியர் பணியிட விபரங்களை அனுப்ப, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு, முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இரு வகுப்புக்கும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளதால், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் பட்சத்தில், மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
அதனால், நடப்பு கல்வியாண்டில், 1,500க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுத்தபோதும், அது இன்னும் நிறைவடையவில்லை. இதனால், முன்கூட்டியே இந்நடவடிக்கையை தொடங்க, பள்ளி கல்வித்துறையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மே, 31ல் ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர் பெயர் விபரம், அதனால் ஏற்படும் காலியிடம், ஏற்கனவே உள்ள காலிப்பணியிடம் உள்ளிட்ட விபரங்களை தொகுத்து அனுப்ப, அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு, முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இரு வகுப்புக்கும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளதால், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் பட்சத்தில், மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
அதனால், நடப்பு கல்வியாண்டில், 1,500க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுத்தபோதும், அது இன்னும் நிறைவடையவில்லை. இதனால், முன்கூட்டியே இந்நடவடிக்கையை தொடங்க, பள்ளி கல்வித்துறையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மே, 31ல் ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர் பெயர் விபரம், அதனால் ஏற்படும் காலியிடம், ஏற்கனவே உள்ள காலிப்பணியிடம் உள்ளிட்ட விபரங்களை தொகுத்து அனுப்ப, அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment