ஆசிரியர் காலி பணியிட விபரம்: முன்கூட்டியே அனுப்ப உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 11, 2020

ஆசிரியர் காலி பணியிட விபரம்: முன்கூட்டியே அனுப்ப உத்தரவு

அடுத்த கல்வியாண்டில் காலியாகும் முதுகலை ஆசிரியர் பணியிட விபரங்களை அனுப்ப, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.


 தமிழகத்தில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு, முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இரு வகுப்புக்கும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளதால், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் பட்சத்தில், மாணவர்கள் பாதிக்கப்படுவர்.


 அதனால், நடப்பு கல்வியாண்டில், 1,500க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுத்தபோதும், அது இன்னும் நிறைவடையவில்லை. இதனால், முன்கூட்டியே இந்நடவடிக்கையை தொடங்க, பள்ளி கல்வித்துறையில் திட்டமிடப்பட்டுள்ளது.


அதன்படி, மே, 31ல் ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர் பெயர் விபரம், அதனால் ஏற்படும் காலியிடம், ஏற்கனவே உள்ள காலிப்பணியிடம் உள்ளிட்ட விபரங்களை தொகுத்து அனுப்ப, அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment