4 பணியிடங்களுக்கு ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் குவிந்ததால் பரபரப்பு! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, February 21, 2020

4 பணியிடங்களுக்கு ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் குவிந்ததால் பரபரப்பு!

மதுரை மாவட்டத்தில் இரவு காவலர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 4 அரசு பணியிடங்களுக்காக நடைபெற்ற தேர்வில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


மதுரை மாவட்ட ஊரகவளர்ச்சி துறையில், இரவு காவலர், அலுவலக உதவியாளர் உள்ள 4 -காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியானது


.இதனையடுத்து நேற்று நடைபெற்ற ஆட்தேர்வில் மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த எம்பிஏ, எம்சிஏ, பிஇ படித்த ஆயிரத்து 437 பட்டதாரிகள் காலை முதலே நீண்ட நேரம் காத்திருந்தனர்.


250 பேருக்கு ஒரு சுற்று என 6-சுற்றுகளாக அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இப்பணிகளுக்காக 800க்கும் மேற்பட்ட பெண் பட்டதாரிகளும், சிலர் குழந்தைகளுடனும் தேர்வுக்கு வந்திருந்தால் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment