ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு குறித்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை:அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, February 22, 2020

ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு குறித்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை:அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு குறித்து மொட்டை கடிதம் தான் வந்துள்ளது, அதில் புள்ளிவிவரம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு குறித்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என அவர் தெரிவித்தார். 1-ம் வகுப்பு முதல் 8-ம்  வகுப்பு வரை ஆசிரியர் பணிக்காக டெட் 1 தேர்வும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புக்கு ஆசிரியர் பணிக்காக டெட் 2 தேர்வும் நடத்தப்பட்டது. 2012, 13, 14 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சியானவர்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.


இதில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் தாளில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் 2-ம் தாளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதாக புகார் எழுத்துள்ளது



. இந்நிலையில் ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது; 2012-14 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவது ஆதாரமற்ற புகார். ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்ததாக புள்ளி விவரங்களுடன் புகார் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment