ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்த புதிய உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, February 17, 2020

ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்த புதிய உத்தரவு

பிளஸ் 1 மாணவர்களுக்கு, சைக்கிள் பற்றாக்குறை விபரம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், மேல்நிலைக்கல்வி பயில ஊக்குவிக்க, ஆண்டுதோறும் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது.



 நடப்பு கல்வியாண்டு மாணவருக்கு, ஒப்பந்ததாரர் மூலம், அந்தந்த பள்ளிகளில் உதிரிபாகங்கள் அனுப்பப்பட்டு தயாராகி வருகின்றன. சேலம் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க, சைக்கிள்கள் தயாராகவுள்ளன.

 ஆனால், கடந்தாண்டு வழங்கிய தேவைப்பட்டியல் அடிப்படையில், சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. அது நடப்பு கல்வியாண்டில், கூட, குறைய வாய்ப்புள்ளது.


 இதனால், பற்றாக்குறை, உபரி குறித்த விபரங்களை, அனைத்து பள்ளி ஆசிரியர்கள் துல்லியமாக குறித்து, அறிக்கையாக சமர்ப்பிக்க, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment