மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, February 21, 2020

மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசுப் பள்ளி ஆசிரியா் பணி தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் மாா்ச் 2-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.


இது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரிய ஆசிரியா் தகுதித் தேர்வு இயக்குநா் வெளியிட்டுள்ள செய்தி:

மத்திய அரசின் ஆசிரியா் தகுதித்தேர்வு நிகழாண்டு ஜூலை 5-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 112 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.

இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் ஜனவரி 24-ஆம் தேதி முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாா்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. மாா்ச் 5- ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை இணையதளம் மூலம் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

மேலும் பாடத்திட்டம், எழுத்துத்தேர்வு மொழி, தேர்வு மையங்கள், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள இணையதளத்தை அணுகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment