எந்த சாலைகளில் எந்த வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, February 22, 2020

எந்த சாலைகளில் எந்த வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும்?

இந்தியாவில் சாலைகளில் வாகனங்களை இயக்குவதற்கான வேகக்கட்டுப்பாடு அளவை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.


இந்தியாவில் எந்த எந்த சாலையில் எந்த எந்த வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்று  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்ணயம் செய்துள்ளது.



இது குறித்து 2018-ம் ஏப்ரல் மாதம் சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. அந்த பட்டியலின்படி, வாகனங்கள் சாலையில் செல்ல வேண்டிய  வேகங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளது.

கார்கள் விரைவுச்சாலையில் 120 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 100 கி.மீட்டர் வேகம் வரையிலும் செல்லலாம்.

நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 70 கி.மீட்டர் வேகம் வரை கார்களை இயக்கலாம். பேருந்துகள் உள்ளிட்ட  பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விரைவுச்சாலையில் 100 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 90 கி.மீட்டர் வேகம் வரையிலும் செல்லலாம். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 60 கி.மீட்டர் வேகம் வரை பேருந்துகளை  இயக்கலாம்.

 லாரி உள்ளிட்ட சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்கள், விரைவுச்சாலையில் 80 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 80 கி.மீட்டர் வேகம் வரையிலும் அதிகப்பட்சமாக இயக்க வேண்டும். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 60  கி.மீட்டர் வேகத்திற்கு மேல் இயக்கக்கூடாது.



இருசக்கர வாகனங்கள் விரைவுச்சாலையில் 80 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 80 கி.மீட்டர் வேகம் வரையிலும் இயக்கலாம். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 60 கி.மீட்டர் வேகம் வரை இயக்கலாம்.

 3 சக்கர வாகனங்களை   விரைவு மற்றும் நாற்கரச்சாலையில் இயக்கக்கூடாது. இதனை தவிர அனைத்து சாலைகளிலும் 50 கி.மீட்டர் வேகம் வரை இயக்கலாம். வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த அரசு வலியுறுத்தி வரும் நிலையில், விபத்துகள் நடப்பது பொதுமக்கள்  மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தாமல் பயணம் செய்வதுதான், விபத்துகள் நடப்பதற்கு காரணம் என போக்குவரத்து அதிகாரிகள், சமூக ஆர்வலர்களின் கருத்தாகவுள்ளது.

No comments:

Post a Comment