இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு கவர்னர் வழங்கிய சிறப்பு விருது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, February 21, 2020

இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு கவர்னர் வழங்கிய சிறப்பு விருது

ஏரோ நாட்டிகல் சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு விண்வெளி மற்றும் பாதுகாப்பு விருது வழங்கப்பட்டது.



பிராந்திய விமான போக்குவரத்து வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றிய ஏரோநாட்டிகல் சொசைட்டி ஆப் இந்தியாவின் 70ம் பொதுக்கூட்டம் மற்றும் விண்வெளி பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் சமீபத்திய மேம்பாடுகளைப் பற்றிய தேசிய மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.


 மாநாட்டில் இஸ்ரோ, டிஆர்டிஓ, எச்ஏஎல், என்ஏஎல், டிஜிசிஏ, இந்திய விமானப்படை, இந்திய  கடற்படை, இந்திய விமான நிலைய ஆணையம், விமான நிறுவனங்கள் போன்ற  அமைப்புகளிலிருந்து வந்த சுமார் 500க்கும்  மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


என்ஐடிஐ ஆயோக்கின் உறுப்பினர் வி.கே.சரஸ்வத், முன்னாள் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் மற்றும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் போன்ற முக்கிய உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.


நிகழ்ச்சியில், ஏரோநாட்டிகல் சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு விருதை இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். இதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட விருதுகளும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment