கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த அலைபேசிகளில் கால் டியூனுக்கு குரல் கொடுத்த கொச்சி பி.எஸ்.என்.எல்., இளநிலை அதிகாரிக்கு பாராட்டு குவிகிறது.
கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து போன் அழைப்புகளிலும் காலர் டியூன் வருகிறது. இருமலுடன் ஆரம்பிக்கும் இந்த காலர் டியூனில், ஒரு பெண் இது தொடர்பாக வேகமாக, அதே நேரத்தில் தெளிவாக ஆங்கிலத்தில் பேசுகிறார். 38 விநாடிகளில் இது பேசி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த குரலுக்கு சொந்தக்காரர் கொச்சி அருகே எர்ணாகுளத்தை சேர்ந்த ஸ்ரீபிரியா. எர்ணாகுளம் அருகே காந்திநகர் டெலிகாம் ஸ்டோரில் இளநிலை கணக்கு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். பி.எஸ்.என்.எல். சேவைகளில் இவரது குரல் அதிகமாக ஒலித்து கொண்டிருந்தது.
இப்போது அனைத்து அலைபேசி நிறுவனங்களிலும் இவரது குரல் ஒலிக்கிறது. வேகமான இவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது
கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து போன் அழைப்புகளிலும் காலர் டியூன் வருகிறது. இருமலுடன் ஆரம்பிக்கும் இந்த காலர் டியூனில், ஒரு பெண் இது தொடர்பாக வேகமாக, அதே நேரத்தில் தெளிவாக ஆங்கிலத்தில் பேசுகிறார். 38 விநாடிகளில் இது பேசி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த குரலுக்கு சொந்தக்காரர் கொச்சி அருகே எர்ணாகுளத்தை சேர்ந்த ஸ்ரீபிரியா. எர்ணாகுளம் அருகே காந்திநகர் டெலிகாம் ஸ்டோரில் இளநிலை கணக்கு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். பி.எஸ்.என்.எல். சேவைகளில் இவரது குரல் அதிகமாக ஒலித்து கொண்டிருந்தது.
இப்போது அனைத்து அலைபேசி நிறுவனங்களிலும் இவரது குரல் ஒலிக்கிறது. வேகமான இவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது
No comments:
Post a Comment