பங்கு வர்த்தக ஒழுங்கு முறை ஆணையத்தில் (செபி) நிரப்பப்பட உள்ள 147 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 147
பணி: Assistant Manager
தகுதி: சிஏ,, சி.எஸ்., சி.எப்.ஏ., சி.டபுள்யு.ஏ மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள், சட்டம், எம்சிஏ., சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் மற்றும் இவை சார்ந்த பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 29.02.2020 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sebi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2020
No comments:
Post a Comment