விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கு காவல்துறை பிறப்பித்துள்ள உத்தரவுகள் என்னென்ன? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 30, 2020

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கு காவல்துறை பிறப்பித்துள்ள உத்தரவுகள் என்னென்ன?

இதில் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கு போலீஸார் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.


* தகுந்த வாகனத்தில் செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் நெடுந்தூரம் பயணிப்பதற்கு அனுமதி மறுப்பு. நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே முறையாகப் பதிவு செய்து அனுமதி.


* நெடுந்தூரப் பயணத்திற்கு இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சுமார் 100 கி.மீ. உள்ள பக்கத்து மாவட்டங்களுக்கு மட்டுமே இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி.

* விண்ணப்பிப்பவர்கள் வெளியூர் செல்ல அனுமதி கேட்டு பாஸ் பெறுவதற்கு விண்ணப்பிப்பவர்கள் எங்கிருந்து புறப்படுகிறோம், எங்கு செல்ல இருக்கிறோம் என்பதையும் தெளிவான தொடர்பு எண்களுடன் தெரிவிக்க வேண்டும்.

* திருமண நிகழ்ச்சிக்கு செல்ல விண்ணப்பிப்பவர்கள் திருமண அழைப்பிதழ் உள்ளிட்ட ஆவணங்களைச் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். அதிலும் அவசியமான நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். அதிகபட்சமாக 7 பேர் திருமணத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். கார் அல்லது வேனில் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

* அனைவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பதை பரிசோதித்த பின்னரே அனுமதி.

* நெருங்கிய ரத்த உறவில் யாரேனும் மரணமடைந்தால் மட்டுமே செல்வதற்கு அனுமதி. அதையும் அந்த ஊர் போலீஸார் சென்று விசாரணை நடத்தி உண்மையாகவே இறந்துள்ளார்களா? என்பதை உறுதி செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும்.


* அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. மருத்துவ உதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் முறையான மருத்துவ ஆவணங்கள், எந்த மருத்துவர் சிகிச்சை அளிக்கிறாரோ அவருடைய தொடர்பு எண், யாருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்பது குறித்த முழுமையான விவரங்களோடு விண்ணப்பிக்க வேண்டும்.

அதை போலீஸார் அந்த மருத்துவருக்கு போன் செய்து அவசர மருத்துவ உதவி உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும்.

* யார் உதவியும் இல்லாமல் தனிமையில் உள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள், மனைவி, தாய், சகோதரி உள்ளிட்டோரை பார்ப்பதற்கும் முறையான பரிசீலனைக்குப் பிறகு அனுமதி வழங்கப்படும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் உரிய காரணத்துடன் முழுமையான தகவல்களை வழங்கினால் மட்டுமே உடனடியாக பரிசீலனை செய்து அனுமதி வழங்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

நேரில் வருபவர்களுக்கும் உரிய ஆவணங்கள் வைத்திருந்தால் உடனடியாக பரிசீலனை செய்து தகவலை உறுதி செய்து அனுமதிச் சீட்டு வழங்குகிறார்கள்.

No comments:

Post a Comment