இரங்கல் செய்திகள் மட்டும் 15 பக்கங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 21, 2020

இரங்கல் செய்திகள் மட்டும் 15 பக்கங்கள்

அமெரிக்காவில் 'பாஸ்டன் குளோப்' பத்திரிகையில், கொரோனாவால் பலியானவர்களின் இரங்கல் செய்திகள் மட்டும் 15 பக்கங்களுக்கு இடம்பெற்றிருந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு மாசாசூசெட்ஸ் மாகாணத்தில், கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.

அங்கு, 38 ஆயிரம் பேருக்கு தொற்று உள்ளது. இதுவரை, 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அங்கு வெளியாகும், 'பாஸ்டன் குளோப்' பத்திரிகையில், 15 பக்கங்களுக்கு, காலமானார் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன

. இதனை பகிர்ந்த நெட்டிசன்கள், கவலை தெரிவித்தனர்.இத்தாலியும் இதே போல் பலியானர்வர்களின் விவரங்கள் அதிக பக்கங்களில் வெளியானதை பலரும் பகிர்ந்தனர்.

No comments:

Post a Comment