பி.எட்., நுழைவு தேர்வுக்கு மே 4ல் விண்ணப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 24, 2020

பி.எட்., நுழைவு தேர்வுக்கு மே 4ல் விண்ணப்பம்

நாடு முழுதும் செயல்படும், கல்வியியல் கல்லுாரிகளில், பட்டப்படிப்பு முடித்தவர்கள், பி.எட்., - எம்.எட்., படிப்புகளில் சேரலாம்.



அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் சேர, நுழைவு தேர்வு கிடையாது. ஆனால், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்தும், கல்லுாரிகளில் சேருவதற்கு, பொது நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.




இந்த நுழைவு தேர்வு, மே, 24ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது; விண்ணப்ப பதிவு, ஏப்., 6ல் துவங்கியது. இந்நிலையில், தேர்வை எழுத விருப்பம் உள்ள மாணவர்கள், மே, 4க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment