விரைவில் கொரோனாவின் கதை முடிகிறது...!! அறிவிப்பு வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 3, 2020

விரைவில் கொரோனாவின் கதை முடிகிறது...!! அறிவிப்பு வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்


இன்னும் சில மாதங்களில் கொரோனா வைரசை தடுப்பதற்கான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் .

 இதுநாள் வரை அவர்கள் மேற்கொண்டு வந்த ஆய்வு தற்போது வெற்றி பெற்றுள்ளதாகவும் விரைவில் முறையான அனுமதி பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு தடுப்பூசி கொண்டு வரப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்



. கடந்த சில மாதங்களாக பீட்டர்ஸ் பர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசன் விஞ்ஞானிகள் குழு கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், தாங்கள் தயாரித்துள்ள மருந்து பெருமளவில் கொரோனா வைரசை செயல்பாட்டை கட்டுப்படுத்துவதாகவும், அதன் செயல்பாடு அபாரமாக உள்ளதாக தாங்கள் அதை உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அம்மருந்தை எலிகளில் பரிசோதித்தபோது தங்கள் அது வைரஸை வெற்றிகரமாக எதிர்த்ததுடன் உடலில் போதுமான ஆன்டிபாடிகளை அது உருவாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .

இதற்கு முன்பாக சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற வைரஸ்களுக்கு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது என்றும் சார்ச் வைரஸ் கிருமிகளில் நெருங்கிய தொடர்புடைய இந்த கொரோனா வைரசுக்கு எதிராக தங்கள் மருந்து சரியான முறையில் செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர் .

 இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் பிட் ஸ்கூல் ஆப் மெடிசின் மற்றும் அறுவை சிகிச்சையியல் துறையில் பேராசிரியராக உள்ள ஆண்ட்ரியா காம் போட்டோ , சார்ஸ் மற்றும் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கு புரதம் எனப்படும் ஒரு குறிப்பிட்ட பொருள் முக்கியமானது என்பதை இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிந்து கொண்டாதாக தெரிவித்துள்ளார்


இந்த வைரசை எப்படி எதிர்க்க முடியும் என்பதை இந்த ஆராய்ச்சியின் மூலம் தாங்கள் தெரிந்து கொண்டதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரஸ் புரதங்களைப் பயன்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
கோவிட் 19 என்ற கொரோனா வைரஸூக்கு முன்னோடியான SARS-CoV(2003ம் ஆண்டு) மற்றும் MERS-CoV(2014) ஆகிய இரண்டு வைரஸுக்கும் மருந்து கண்டுபிடிப்பதில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அறிவியலாளர்கள் குழு, கோவிட் 19-க்கும் தடுப்புமருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது.

பிட்ஸ்பர்க் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள மருந்துக்கு PittCoVacc என்று பெயர் சூட்டியுள்ளனர். விரல் நுனு போன்று தோற்றமுடைய Band-aid போன்று ஒட்டக்கூடிய தன்மையுடையதாக அது உள்ளது. அதை உடலில் ஒட்டியவுடன், அதிலிருந்து கொரோனாவிற்கு எதிராக செயல்படக்கூடிய நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட மருந்து வீரியமாக பணிபுரிந்திருக்கிறது. மருந்தை ஊசி மூலமாகவோ, மாத்திரையாகவோ செலுத்தாமல், ஒட்டும்வகையில் உருவாக்கியுள்ளனர். அதனால் மைக்ரோநீடில்ஸ் மூலமாக மருந்து துரிதமாகவும் கொரோனாவிற்கு எதிராக வலுவாகவும் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸின் தாக்கத்தை இந்த மருந்து சிறப்பாக மட்டுப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எலிகள் மீது செய்த பரிசோதனையில் கொரோனாவிற்கு எதிராக இந்த மருந்து சிறப்பாக செயல்பட்டு கொரோனா வைரஸின் தாக்கத்தை மட்டுப்படுத்தியதாக தெரிவித்திருக்கிறார்கள்.


எனவே இந்த மருந்தை அடுத்ததாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிடம்(FDA) சமர்ப்பித்து, அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை பெற பிட்ஸ்பர்க் ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்பின்னர் முதல் கட்டமாக மனித உடலில் இந்த மருந்து பரிசோதிக்கப்படும். அப்போதும் வெற்றியடைந்துவிட்டது என்றால், பின்னர் சந்தைக்கு வரும். ஆனால் எப்படியும் இந்த பிராஸஸ் முடிவதற்கு ஓராண்டுக்கு மேல் ஆகிவிடும். எனவே இப்போது இந்த மருந்தை பயன்படுத்த முடியாவிட்டாலும் எதிர்காலத்தில் கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் பிட்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழக அறிவியலாளர்கள் உள்ளனர்.


 தற்போது தாங்கள் நடத்திய ஆய்வில் எலிகளில் நீண்ட நாட்களாக ஆய்வு நடைபெறவில்லை என்றாலும் தடுப்புசி இரண்டு வாரங்களுக்குள் கொரோனா வைரஸுக்கு எதிராக போதுமான ஆன்ட்டிபயாட்டிக்குகளை உருவாகியது என்றும் தெரிவித்துள்ளனர் .

தற்போது தங்கள் தயாரித்துள்ள மருந்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் விசாரணைக் குழுவுக்கு அனுப்பி உள்ளதாகவும் அடுத்த சில மாதங்களில் அது மனிதர்களின் மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு வந்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரலாமென்று தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

Source Dinamani website and Asianet website

No comments:

Post a Comment