நியான விலை கடைகளில் மே மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கு வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் நாள் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 22, 2020

நியான விலை கடைகளில் மே மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கு வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் நாள் அறிவிப்பு

நியான விலை கடைகளில் மே மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கு கூட்ட நெரிசலை தவிர்க்க இம்மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தினக்கூலிகள், கட்டட வேலைகள் செய்பவர்கள் என சில அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்கள், தொழிலாளர்கள் என பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர்

இதனால், ஏப்ரல், மே மாதங்களில் தமிழக நியாய விலைக்கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.


அந்த வகையில், அடுத்து மே மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கு கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க இம்மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் எனவும், அந்த டோக்கனில் குறிப்பிட்ட தேதிகளில் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து இலவச பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது

No comments:

Post a Comment