ஊரடங்கை தளர்த்த முடியாது -  முதலமைச்சர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, April 19, 2020

ஊரடங்கை தளர்த்த முடியாது -  முதலமைச்சர்

தில்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால், 'தில்லியில் கரோனா வைரஸ் பரவினாலும், கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தில்லியில் ஊரடங்கு தளர்த்த வாய்ப்பில்லை.

தில்லியில் 77 இடங்கள் கரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக இருப்பதால், தில்லியில் ஊரடங்கை தளர்த்த முடியாது. ஏப்ரல் 27 அன்று  ஊரடங்கு தளர்வு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தப்படும்.


தில்லியில் புதிதாக கரோனா உறுதியான 186 பேரும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளது கவலை அளிக்கிறது. தற்போது 1900 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் ஐ.சி.யுவில் உள்ளனர். 6 பேர் வென்டிலேட்டர் மூலமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment