இஸ்ரோ இளம் விஞ்ஞானி திட்டம் கரோனாவால் ஒத்திவைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 21, 2020

இஸ்ரோ இளம் விஞ்ஞானி திட்டம் கரோனாவால் ஒத்திவைப்பு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் நடத்தப்படும் இளம் விஞ்ஞானிகள் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக 'யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த ஆண்டு இஸ்ரோ அறிமுகம் செய்தது.


 இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.

இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி நடப்பு ஆண்டுக்கான 'யுவிகா' பயிற்சி இஸ்ரோவின் 4 மையங்களிலும் மே 11 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 5-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 1.52 லட்சம் பள்ளி மாணவர்கள் வரை விண்ணப்பித்தனர். 


அவர்களில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் தலா 10 பேர் வீதம் தற்காலிகமாக 368 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதிக்கட்ட மாணவர் தேர்வுப் பட்டியலை இஸ்ரோ வெளியிட இருந்தது.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவலை அடுத்து மே 11 முதல் 22 வரை நடைபெற இருந்த இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது. இந்தத் திட்டத்துக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment