வங்கி இஎம்ஐ செலுத்துவதை தள்ளிப்போட வேண்டுமா;  OTP-  ஐ சொல்லுங்கள்- உலா வரும் மோசடி: மத்திய அரசு எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 8, 2020

வங்கி இஎம்ஐ செலுத்துவதை தள்ளிப்போட வேண்டுமா;  OTP-  ஐ சொல்லுங்கள்- உலா வரும் மோசடி: மத்திய அரசு எச்சரிக்கை

கொவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்பான பல்வேறு பொய் செய்திகளும், ஆவணங்களும் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. இதைக் கண்டுபிடித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்படுகிறது.


இந்தப் பிரிவு கொவிட்-19 தொடர்பான தகவல்களை உடனுக்குடன் சரிபார்த்து, உண்மையை எடுத்துரைக்கிறது. அவர்கள் இன்று அளித்துள்ள எச்சரிக்கை தகவல்கள்

வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப்போடுவதற்கு OTP ஐ சொல்லுங்கள் என்று கேட்கும் சைபர் மோசடிகள் குறித்து கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்.


வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப்போடுவதற்கு ஓடிபி-ஐ தெரிவிக்க வேண்டியது இல்லை. உங்கள் ஓடிபி-ஐ யாருக்கும் தெரிவிக்காதீர்கள்.ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், சொகுசு விடுதிகள் ஆகிய அனைத்தும் 2020 அக்டோபர் 15 வரை மூடப்பட்டிருக்கும் என்று மத்திய சுற்றுலா அமைச்சகம் ஆணை பிறப்பித்திருப்பதாக ஒரு போலி ஆவணம் பரவலாகப் பகிரப்படுகிறது.


இந்த ஆவணம் போலியானது, அத்தகைய ஆணையை சுற்றுலா அமைச்சகம் பிறப்பிக்கவில்லை. இதனை நம்ப வேண்டாம்.

இவ்வாறு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment