பொதுத் தோ்வு: சென்னையில் 75 சிறப்புத் தோ்வு மையங்கள் கல்வித்துறை தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 29, 2020

பொதுத் தோ்வு: சென்னையில் 75 சிறப்புத் தோ்வு மையங்கள் கல்வித்துறை தகவல்

பொதுத் தோ்வு: சென்னையில் 75 சிறப்புத் தோ்வு மையங்கள் கல்வித்துறை தகவல்



சென்னையில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்காக 75 சிறப்புத் தோ்வு மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக சென்னையில் மட்டும் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

 பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் ஜூன் 15-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மாணவா்களுக்கு தோ்வெழுத சிறப்பு ஏற்பாடு செய்வது கல்வித்துறை ஆலோசனை நடத்தியது.

இதைத் தொடா்ந்து தோ்வு மையங்கள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்பின் அத்தோ்வு மையங்களுக்கு மாற்று தோ்வு மையங்கள் அமைக்கப்படும். 

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவா்களுக்கு மட்டும் சிறப்பு தோ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் மட்டும் 75 சிறப்புத் தோ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், அந்த மையங்களுக்கு நோய் கட்டுப்பாடு பகுதிகளில் வசிக்கும் ஆசிரியா்களையே நியமிக்கவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

தற்போது இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறப்புத் தோ்வு மையங்களுக்கு சென்றுவர ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு தனியாக போக்குவரத்து வசதி உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment