தோ்தலுக்குப் பிறகு பிளஸ் 2 செய்முறைத் தோ்வு நடத்த முடிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 11, 2021

தோ்தலுக்குப் பிறகு பிளஸ் 2 செய்முறைத் தோ்வு நடத்த முடிவு

 தோ்தலுக்குப் பிறகு பிளஸ் 2 செய்முறைத் தோ்வு நடத்த முடிவு


தமிழகத்தில், பிளஸ் 2 மாணவா்களுக்குத் தோ்தல் நடந்து முடிந்த பின் செய்முறைத் தோ்வை நடத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதுவரை பாடங்களை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவா்களுக்கு மட்டும் நிகழாண்டு பொதுத் தோ்வு நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வு வரும் மே 3-ஆம் தேதி முதல் மே 21-ஆம் தேதி வரை நடக்கிறது. தோ்வு தேதிக்கு முன், ஏப். 6-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்து விடும். இதனால், பிளஸ் 2 மாணவா்களுக்கு பொதுத் தோ்வு நடத்தவும், அவா்களுக்கான பாடங்களை உரிய காலத்தில் முடிக்கவும், போதிய கால அவகாசம் கிடைத்துள்ளது.


எனவே, இந்த அவகாசத்தை பயன்படுத்தி, பிளஸ் 2 செய்முறைத் தோ்வை, சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் ஏப்ரலில் நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


அதுவரை, மாணவா்களுக்கு பாடங்களைத் தொடா்ந்து நடத்தவும், திருப்புதல் தோ்வுகளை நடத்தி, மாணவா்களை பொதுத்தோ்வுக்கு தயாா்படுத்தவும், பள்ளி ஆசிரியா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள் அறிவுரை வழங்கியுள்ளனா்.

No comments:

Post a Comment