தொடர் அங்கீகார சான்று கட்டணத்தில் விலக்கு: இளம்மழலையர் பள்ளிகள் அசோசியேஷன் வலியுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 23, 2021

தொடர் அங்கீகார சான்று கட்டணத்தில் விலக்கு: இளம்மழலையர் பள்ளிகள் அசோசியேஷன் வலியுறுத்தல்

 தொடர் அங்கீகார சான்று கட்டணத்தில் விலக்கு: இளம்மழலையர் பள்ளிகள் அசோசியேஷன் வலியுறுத்தல்


கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு தொடர் அங்கீகார சான்றிதழ்களுக்கான கட்டண விலக்கு அளிக்க வேண்டும்,' என, மதுரையில் தமிழ்நாடு இளம்மழலையர் பள்ளிகள் அசோசியேஷன் வலியுறுத்தியது.


அதன் மாநில பொது செயலாளர் கல்வாரி தியாகராஜன் கூறியதாவது: மாநிலத்தில் 5000 இளம்மழலையர் பள்ளிகள் 2020 மார்ச் முதல் இதுநாள் வரை மூடப்பட்டுள்ளன. இவற்றில் பணிபுரியும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இளம் குழந்தைகளின் கல்வி திறன் பாதிக்கப்பட்டுள்ளது. 


பள்ளி நடத்துவோர் 15 மாதங்களாக எந்த வருவாய் இன்றி வாடகை, பராமரிப்பு செலவுகளை செய்து வருகின்றனர்.


ஒவ்வொரு பள்ளியிலும் தாளாளர்கள் ரூ.10 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்துள்ளனர். கொரோனா முற்றிலும் ஒழிந்து ஊரடங்கு வாபஸ் பெற்றவுடன் பள்ளிகளை உடனடியாக திறக்க மாநில அரசு உத்தரவிட வேண்டும்.


பள்ளிகளுக்கு முந்தைய அரசால் கொடுக்கப்பட்ட வழிகாட்டு வரைமுறையிலிருந்து முழு தளர்வுகள் அளிக்க வேண்டும். பள்ளி நிர்வாகிகளை அரசு அழைத்து பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment