கல்விச் செய்திகள் - தலைப்புச் செய்திகள்- 15.06.2024 - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 15, 2024

கல்விச் செய்திகள் - தலைப்புச் செய்திகள்- 15.06.2024

 கல்விச் செய்திகள் - தலைப்புச் செய்திகள்- 15.06.2024

கல்விச் செய்திகள் - தலைப்புச் செய்திகள்



மின்னல் கல்விச்செய்தி 1 முதல் 15 குழுக்களில் உள்ள நண்பர்கள் 13  வது குழுவில் இணைய வேண்டாம்

மற்ற குழுக்களில் உள்ள நண்பர்கள் 13 வது குழுவில் இணைந்து கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் 

16.06.2024

15 ) கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் இதர செயல்பாடுகள் குறித்த விவரங்களை கல்லூரிகள் இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.


14 ) கல்லூரி சேர்க்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தை திருப்பி தர வேண்டுமென யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

13 ) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2024 - 25ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

12 ) பெரியாா் பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

11 ) டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைகழகத்தில் 1100 முதுகலை படிப்புகளுக்கான இடங்களுக்கு 11000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

10 )    பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்களை தேர்வுத் துறை ஜூன் 19-ம் தேதி வெளியிடுகிறது

9 ) பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவு ஜூன் 18-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

8 ) அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்பு வாரந்தோறும் 40 நிமிடங்கள் தனி பாடவேளையாக நடத்தப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது

7 )அரசுப் பள்ளிகளில் உபரியாக இருந்த 915 இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலம் பணிநிரவல் செய்யப்பட்டுள்ளனர்.

6 )மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற 'தமிழ்ப்புதல்வன் திட்டம்' வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெருவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

5 ) சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பிடெக் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது

4 ) நீட் தேர்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 )நீட் தேர்வுகளில் முறைகேடுகளை அரசு பொறுத்துக் கொள்ளாது. குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சரி செய்யப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

2 ) அரசு மாதிரி பள்ளிகளில் பணிபுரியும் நூலகர் உட்பட தொகுப்பூதிய ஊழியர்களுக்கான ஊதியத்தை பள்ளிக் கல்வித் துறை உயர்த்தியுள்ளது.

1 ) அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 3,296 தற்காலிக பணியாளர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான ஆணையை பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment