தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 22, 2024

தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

 தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்


தமிழகத்தில் பல்வேறு ஐஏஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகராட்சி ஆணையராக சுங்கபுத்திரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி ஆணையராக ஸ்ரீகாந்த், கடலூர் மாநகராட்சி ஆணையராக அனு நியமிக்கப்பட்டுள்ளனர்

ரஞ்சித் சிங் சேலம் மாநகராட்சி ஆணையராகவும் , கந்தசாமி ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அருங்காட்சியகம் இயக்குநர் பொறுப்பிற்கு கவிதா ராமு ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புது திருப்பூர் பகுதி வளர்ச்சிக் குழு மேலாண் இயக்குநராக ஹனீஷ் சாப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக அமிர்தஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமைச் செயல் அதிகாரியாக ஏ. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment