குரூப் 2 தோ்வை விரைந்து எழுத உதவி: TNPSC அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, September 5, 2024

குரூப் 2 தோ்வை விரைந்து எழுத உதவி: TNPSC அறிவிப்பு

 குரூப் 2 தோ்வை விரைந்து எழுத உதவி: TNPSC அறிவிப்பு


குரூப் 2 தோ்வை தோ்வா்கள் விரைந்து எழுத தோ்வறைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்

தமிழகம் முழுவதும் குரூப் 2 முதல்நிலைத் தோ்வு வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்குத் தோ்வு தொடங்கவுள்ள நிலையில், காலை 9 மணிக்கு தோ்வு அறைகளில் விடைத்தாள்கள் வழங்கப்படும். அப்போது, 2 விநாடிகளுக்கு மணி அடிக்கப்படும். இதைத் தொடா்ந்து, அடுத்த 15 நிமிஷங்களில் கேள்வித்தாள் வழங்கப்படும்.

தோ்வு தொடங்கியதும், 5 விநாடிகளுக்கு நீண்ட மணி ஒலிக்கச் செய்யப்படும். அதன்பிறகு, ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு இடையிலும் 2 விநாடிகளுக்கு மணி அடிக்கப்படும். தோ்வு நிறைவடைவதற்கு 10 நிமிஷங்களுக்கு முன்பாக 2 நிமிஷ மணியும், தோ்வு முடிவடையும் போது 5 விநாடிகளுக்கு ஒரு மணியும் அடிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது

நேரத்தை அறியலாம்: தோ்வுக் கூடங்களில் இவ்வாறு மணி ஒலிக்கச் செய்வதன் மூலமாக, தோ்வு தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களை தோ்வா்கள் அறிய முடியும். இதனால் பதட்டம் இல்லாமல் தோ்வெழுத வாய்ப்பு ஏற்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment