தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஆய்வு செய்யப்பட்ட பள்ளிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 15, 2024

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஆய்வு செய்யப்பட்ட பள்ளிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவல்

 தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஆய்வு செய்யப்பட்ட பள்ளிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவல்


தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 17,810 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 

இதற்கிடையே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி, ஏதேனும் குறைபாடு இருப்பின் உடனே

சரிசெய்ய வேண்டுமென அறிவுறுத்தி இருந்தார். அதனுடன், அமைச்சரும் தான் சுற்றுப் பயணம் செல்லும் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்

மறுபுறம் அமைச்சரின் உத்தரவை பின்பற்றி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 17,810 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் உட்பட துறைசார் அதிகாரிகள் நேரில் சென்று மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் பணிகளை ஆய்வு செய்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த ஆய்வு வரும் நாட்களிலும் தொடரும் எனவும் துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

----------------------------------------------------------------------

மின்னல் கல்விச்செய்தி 2 வது குழுவில் தினமும் காலை 5 மணிக்கு பல புதிய கல்விச் செய்திகள்   பதிவு செய்யப்படுகிறது 


மின்னல் கல்விச்செய்தி 2 வது குழுவில் இணைய - CLICK HERE


மின்னல் கல்விச்செய்தி 1 முதல் 10 வது குழுவில் ஏற்கனவே உள்ள நண்பர்கள் 2 வது குழுவில் இணைய வேண்டாம்


No comments:

Post a Comment