மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 16, 2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டதன் மூலம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ), ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்தாண்டு ஜனவரி 1 2024 முதல் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டதன் மூலம் மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 3% உயர்த்தப்பட்டுள்ளதால், 53 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment